"நாடளாவிய ரீதியில் பிறப்பிக்கப்பட்டுள்ள பயணக் கட்டுப்பாட்டு காலத்தில் மக்களின் செயற்பாடுகள் திருப்தியடையக்கூடிய வகையில் அமையவில்லை. எவ்வாறு இருப்பினும் குறித்த இரு வாரகால கட்டுப்பாட்டு காலத்தில் மக்களின் செயற்பாடுகளின் வெளிப்பாடு எவ்வாறானது என்பதை ஜூன் இரண்டாம் வாரமளவில் அறிந்துகொள்ள முடியும்." என பொதுச் சுகாதார பரிசோதகர் சங்கத்தின் தலைவர் வைத்தியர் உபுல் ரோஹண தெரிவித்தார்.
அவர் மேலும் குறிப்பிடுகையில் "மக்களுக்கான அத்தியாவசியப் பொருட்கள், மருந்துகள் முறையாக வீடுகளுக்குக் கொடுக்கப்படுகின்றது என்றால், அரசு உரிய அதிகாரிகளைக் கொண்டு மக்களைப் பாதுகாக்கும் நடவடிக்கையை எடுக்குமானால் நிச்சயமாகப் பயணத் தடை காலத்தின் பெறுபேறுகள் ஆரோக்கியமானதாக அமையும். அதனையும் அரசு கவனத்தில்கொள்ள வேண்டும்.
மக்களின் நாளாந்த வருமானம் இல்லாது போயுள்ள நிலையில் பொருளாதார ரீதியாகப் பாதிக்கப்பட்டுள்ள மக்கள் குறித்து கவனம் செலுத்தப்பட வேண்டியது அவசியமாகும்.
எவ்வாறு இருப்பினும் நாட்டை மீண்டும் திறக்க முன்னர் வைரஸ் பரவல் நிலைமைகளைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர வேண்டும். இல்லையேல் மீண்டும் நெருக்கடிகளைச் சந்திக்க நேரிடும்" என்று குறிப்பிட்டார்.
Category: செய்திகள், புதிது
Tags: கோத்தாபய ராஜபக்ஷ, இலங்கை